You become the light of your path.....

If you had but the faith of a mustard seed,you could say to this mountain'"Be thou moved'" and so it would be..{Jesus Christ}

Friday, August 13, 2010

பாவம் அவள்


புத்தருக்கும் ஏசு முகமதுவுக்கும் உதித்தது உண்மையின் தத்துவம் இங்கே..
விலங்குக்கும் ஓரறிவு முல்லைக்கும் கருணைக்காட்டியவனும் இங்கே

அப்பாவி மனிதர்களை கொன்றுக்குவித்து, மரண ஓலத்தை சங்கீதமாக ரசித்த,
ஹிட்லரும் அவன் பார்ட்னர் இடியமீன், இவன் வழித்தோன்றல் ச்சீ.. ச்சீ.. ச்சீ... சிங்களவனும் இங்கே...


பரந்த பூமித்தாயின் மார்பகத்தை கூறுப்போட்டு - இந்தப்
பாகம் என்னுடையது அந்தப்பாகம் உன்னுடையது என்று
கோடுகளை கீறி,
உன் நாடு என் நாடு என்று -அவளை
அவலப்படுத்தும் அவமானச்சின்னங்களாய்,
ஆறறிவுப் படைத்த மனித மிருகங்கள் தோன்றுவதும் இங்கே....

அப்பாவி பூமித்தாயின் கருவினிலே இப்படியும் சில
ஈனக்கரு...பாவம் நீ சுமப்பவள் தானே !!!!
உன் கணவனையாவதுக் காட்டு பூமி மாதா.....!!!! அவனிடமாவது முறையிட்டுப்பார்க்கின்றேன்,
இனியாவது, புதியதோர் மனித குலத்திற்கு வித்திடுவாயா என்று !!!!!!!

1 comment: