You become the light of your path.....

If you had but the faith of a mustard seed,you could say to this mountain'"Be thou moved'" and so it would be..{Jesus Christ}

Thursday, March 17, 2011

success


5 Fundamentals for Success in Life
1. Be Proactive

Viktor Frankl said that between stimulus and response there is a gap, and within this gap lies all our freedom. Even as he was suffering immense privations in a Nazi concentration camp, he realized that he was responsible for his thoughts and actions and was not simply a bundle of conditioned responses.

Like Frankl, we should strive to be the creators of our own destiny, orchestrating our experience of life. Everything starts in the mind and ripples out, so what happens around us is a reflection of our own inner world. Whether we allow our inner world to grow wild, whether we let weeds spring up and take hold or whether we cultivate a green and pleasant garden – it is all our choice: this is what it means to be proactive.

2. Take Responsibility

Since we have the power to choose our experience, we also need to accept responsibility for this. Perhaps not that everything that comes our way is a direct result of our own thinking (though some might say it is) but what we attract into our life is, largely, a reflection of our thinking. Much of this occurs on a subconscious level, but the subconscious takes its lead from the thinking mind, so changing our thoughts will change our world, and we are responsible for this.

Our behavior is a natural outcome of our mental images, and so we are responsible for our behavior too, and also for the behavior we tolerate in others. If we allow others to ride roughshod over us, then we have ourselves to blame.

3. Be a Good Leader

We cannot be effective in any area of life unless we have good leadership skills. Leadership is an art and each of us needs to find our own approach to it. Primarily, we need to understand how to lead ourselves, and this means having a compass, a direction which guides all our actions. This compass often takes the form of a personal mission statement, a document spelling out the values we live by.

As we lead others, whether as parents, bosses, in families or organizations of which we are a part, we need first and foremost to lead by example, making it clear what our values are and that we live by them. Any inconsistency in our professed values and our behavior will be spotted, seen through and will ruin our effectiveness. Personal complicity and double standards are the nails in the coffin of our ability to lead.

A good leader will lead quietly and subtly, from the rear, without fuss, without fanfare. In the words of the Tao Te Ching,

‘A good soldier does not inspire fear;
A good fighter does not display aggression;
A good conqueror does not engage in battle;
A good leader does not exercise authority.

This is the value of unimportance;
This is how to win the cooperation of others;
This to how to build the same harmony that is in nature.’

4. Don’t Let Fear Stop You

I love the movies of M Night Shyamalan. My favorite is The Village. The film is about facing the fears that haunt us and realizing that, when we do so, they disappear – nothing is as it seems. I heard once (though I can’t remember where) that the most commonly given command in the Bible is ‘do not be afraid.’

Whenever we grow, there is fear. Whenever we do something new, there is fear. Whenever we push ourselves to new heights or expand our comfort zone, there is fear. This is the nature of life. Life is always moving – either we are moving forward, growing, or we are moving back, dying. We have a choice – we can either grow or we can die. Growth and fear go hand in hand. It’s part of a package, and if we fail to embrace the whole package, we will die.

Don’t fear failure – failure is inevitable and necessary. Look at the life of any successful person and you will see a litany of failure. This failure is the foundation of success, so long as we learn from it.

Don’t fear other people. They are as vulnerable and as beautiful as you are – only sometimes they lash out in various ways to protect themselves. Everyone is doing their best, so be gentle on other people and don’t be scared of them.

When you face your fears, they will vanish like smoke.

5. Never Stop Learning

I have come to the conclusion that learning is the fundamental activity in a successful and purposeful life. If we fail to learn, we fail to grow, and this means that we die. Life gives us endless opportunities to learn, and the more difficult the situation, the more we are likely to learn.

We can learn from other people, especially difficult ones – they are like angels sent from heaven to teach us about ourselves. We can learn from the things happening around us. And most of all, we can learn by watching ourselves, seeing how we react and reflecting deeply on what moves us.

These five activities, if they can become habits, will lead to success in all areas of life. They are not a quick fix, but are the foundation of a life lived well.

By Mark Harrison

What can we do to become more successful? How can we excel in all areas of life, whether professional or personal? A vast body of literature has been written on this subject over the decades, but here are five points which I regard as being fundamental.

MYSTIC TUMERIC


.மஞ்சளின் மகிமையும் முக்கியத்துவமும்



மனிதனின் குடும்ப வாழ்க்கைக்கு உப்பும் மஞ்சளும் மிக அவசியமான ஒன்றாகும்.ஆண்களுக்கு உப்பும்,பெண்களுக்கு மஞ்சளும் பலம் தரும். பெண்களின் அடக்க சக்திக்கும் மனவலிமைக்கும் மஞ்சள்தான் காரணம்.


மஞ்சளில் கறி மஞ்சள்,பொன்குறட்டுமஞ்சள்,கடுக்காய் மஞ்சள், பழுக்காய் மஞ்சள், குட மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், மர மஞ்சள்,காட்டு மஞ்சள், குரங்கு மஞ்சள்,பலா மஞ்சள்,காஞ்சிரத்தின் மஞ்சள்,நாக மஞ்சள் என பல வகைகள் உண்டு.


சுத்தமில்லாத பெண்களின் தொப்புள் வழியாக கெட்ட ஆவிகள் உடலுக்குள் நுழைந்துவிடும்.பிறகு அந்த பெண்ணுடன் சூட்சுமமாக உடலுறவில் ஈடுபடும்.கணவனுடன் எதற்கெடுத்தாலும் சண்டை போட வைக்கும்.இது பல்லாயிரக்கணக்கான வருடங்களாக நிகழ்ந்துவரும் ஒரு நிகழ்வு ஆகும்.


தீய ஆவிகள் சாந்தி முகூர்த்தத்தின்போது படுக்கை அறைக்குள் வராமலிருக்க மணமகனுக்கும் மணமகளுக்கும் மஞ்சள்காப்புகட்டுகின்றனர்.மணமேடைகளில் இருக்கும்போது மஞ்சள் தோய்த்த ஆடைகளை உடுத்துகின்றனர்.திருமாங்கல்யக்கயிறும் மஞ்சள்தான்.


மஞ்சள் குங்குமம் என்பது மஞ்சள்பொடி,எலுமிச்சைசாறு,குங்குமப்பூ,பச்சைக்கற்பூரம்,

பசுநெய்போட்டுத் தயார்செய்வது.இது நெற்றியில் வடு ஏற்படுத்தாது.


எவ்வளவு உயர்ந்த படிப்பு படித்திருந்தாலும் வளமான செல்வங்கள் இருந்தாலும் கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாட்டுக்குக் காரணம் பெண்கள் மஞ்சள் தேய்த்துக்குளிக்காததும்,அசைவ உணவு சாப்பிடுவதாலும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.மேற்கூறிய காரணங்களால் பெண்களின் உடலில் எதிர்ப்புக்கதிர்வீச்சுகள் கூடுதலாகி பெண்களுக்கே உண்டான வசீகரசக்தி மற்றும் ஆகர்ஷணசக்தி குறைகிறது.(தமிழ்நாட்டில் தெருவுக்கு சில முத்தழகுகள் இருப்பதன் காரணம்புரிகிறதா? தோற்றத்தில் பெண்ணாகவும், நடவடிக்கைகளில் ஆணாகவும் இருப்பதற்கு முக்கிய காரணம் இதுதான்)


இயற்கையான மஞ்சள்பட்டுத்துணியில் மின்சார சக்தி உள்ளது.இரண்டு கைகளுக்கிடையில் ஒரு சிறிய மஞ்சள் பட்டுக் கைக்குட்டையை வைத்து என்ன மந்திரம் ஜபித்தாலும் அம்மந்திரத்தை ஈர்த்துக்கொள்ளும் சக்தி அக்கைக்குட்டைக்கு உண்டு.மேலும் மேலும் உள்ளங்கைக்கிடையில் வைத்து சக்தியூட்டிப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டால் நமக்குப் பாதுகாப்பு.மேற்படி உருவேற்றிய மஞ்சள்பட்டுக்கைக்குட்டையை நீரில் நனைக்ககூடாது.துவைக்ககூடாது.வேறு எந்த வகையிலும் சலவை செய்யக்கூடாது.செய்தால் மந்திரசக்தி போய்விடும்.


பெண்கள் மஞ்சள் அரைத்து உடலெங்கும் பூசி நீராடுவது நல்லது.இதனால், அவர்களுக்கு உடலில் காணும் காந்தல்,தூக்கமின்மை போய்விடும்.மேலும் உடல் சுத்தமடையும்.முகத்தில் களை வரும்.


குழந்தைகளுக்கு மஞ்சள் பூசிக்குளிக்க வைத்தால் அவர்களின் மேனி பொன்னிறமாக பளபளப்படையும்.கறுப்பாக இருந்தாலும்!!!



பெண்கள் ஆகர்ஷண சக்தி பெற ஒரு சுலப வழி:


இது ஆண்களுக்கு கண்டிப்பாக செய்யக்கூடாது.300 மி.லி.பசும்பாலைச் சுட வைக்க வேண்டும்.அதில் ஐந்துகிராம் மிளகைத் தட்டிப்போடவேண்டும்.ஒரு கிராம் சுத்தமான விரலிமஞ்சள் பொடியை( சர்வோதயாக்கடைகள்/நாட்டுமருந்துக்கடைகளில் கிடைக்கும்)பாலில் போட வேண்டும்.இரண்டு பெரிய வெள்ளைப்பூண்டு தோலுரித்துஅப்பாலில் போட்டு பின்னர் அடுப்பிலிருந்து இறக்க வேண்டும்.லேசான சூட்டில் இரண்டு ஸ்பூன் பனங்கல்கண்டு போட்டு கலக்கி இரவு படுக்கும் முன் சாப்பிட்டு வரவேண்டும்.இப்படி தினமும் செய்ய வேண்டும்.இதற்கு எந்த விதப் பத்தியமும் கிடையாது.

நன்றி: ஜோதிட பேரரசர் மிஸ்டிக் செல்வம் அவர்கள்.

KAALA SARPHA DHOSAM AND REMEDY


காலசர்ப்ப தோஷம் என்றால் என்ன? அதிலிருந்து மீள்வது எப்படி?


முற்பிறவியில் அதிக புண்ணியம்செய்திருந்தால்,இந்த பிறவியில் நற்செல்வம்,அதிகாரம்,புகழ்,அந்தஸ்து,நற்புத்திரர்,வீடு,வாகன வசதிகள் அமையும்.


முற்பிறவியில் அதிகபாவம் செய்திருந்தால் இப்பிறவியில் போராட்டம், சரியான தருணத்தில் உதவி கிடைக்காமை, ஏழ்மை, வறுமை என வாழ்க்கை உழலும்.

யாராக இருந்தாலும் பாவமே செய்யாமலிருக்க முடியாது.அதில் விலங்குகள்,பறவைகள் இவற்றைத்துன்புறுத்தியிருந்தாலோ, கொன்றிருந்தாலோ அது மிகப்பெரியபாவமாகும்.அதிலும், நாகங்களைக் கொன்றிருந்தால் அதுவே கொடும்பாவமாகக் கருதப்படுகிறது.இது பற்றி கருடபுராணம்,விதுரநீதி,அர்த்தசாஸ்திரம்,சுக்கிரநீதி போன்ற புராணகாலதர்மநூல்கள் நிறைய விளக்கம்கொடுத்துள்ளன.


சிவனின் கழுத்தை அலங்கரிக்கும் பாம்பு/நாகம் விடும் சாபம் நமது ஏழுத்தலைமுறைக்கும்,நமது அடுத்தடுத்த பிறவிக்கும் பெரும்பாதிப்பைத்தரும்.


அனுபவத்தில் தாத்தா,மகன்,பேரன்,கொள்ளுப்பேரன் என வாழையடிவாழையாக காலசர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்ட ஜாதகங்களை நிறைய்ய பார்த்துவருகிறோம்.இப்படிப்பட்ட தோஷங்கள் எப்படி ஏற்படுகின்றன?


இரண்டு பாம்புகள் இணைந்திருக்கும் போது (கிராமங்களில்) அவற்றைக் கொல்லமுயலுகின்றனர்.அப்படி முயலும்போது ஒன்றை மட்டும் கொன்றால்(மற்றது தப்பித்துவிட்டால்) அது மிகக்கொடூரமானதாக பாவமுடையதாக இருக்கின்றது.இந்தப்பாவம் செய்தவர்கள்தான் மறுபிறவியில் லக்னத்தில் ராகு அல்லது கேது தனித்திருக்கப் பிறக்கின்றனர்.விளைவு? மணவாழ்க்கையில் நிம்மதியின்மை!!!


பாம்புகளால் உங்களுக்கு ஆபத்து என நீங்கள் உணரும்போது மட்டும் அவற்றைத் தாக்கினாலோ,கொன்றாலோ அது பெரிய தோஷம்தராது.

அப்படி அடிக்கும்போது அது உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன் என்னை விட்டுவிடுங்கள் என்பதைப்போல தனது வாலால் மூன்றுமுறை தரையில் அடித்துச் சத்தியம் செய்யும்.அப்போது அதை உயிரோடு விட்டுவிட்டால் நீங்கள் சர்ப்ப தோஷத்திலிருந்து தப்பித்தீர்கள்.(தமிழ் சினிமாவில் தான் நாகங்கள் பழிவாங்கும்.நிஜத்தில் அப்படி நிச்சயம்கிடையாது).இல்லாவிட்டால், அது உங்களின் அடிதாங்காமல் உயிர்விட்டால், சாபம் ஈந்துவிட்டு இறக்கும்.


இந்த சாபமே, 7 தலைமுறைக்கும் பிறந்த ஜாதகத்தில் ராகு,கேது கிரகங்களுக்கு இடையில் மற்ற 7 கிரகங்களும் சிக்கும் விதமாக அதுவும்,கடிகாரச்சுற்றுப்படி கேதுவை நோக்கிச் செல்லும்விதமாக தலைமுறைகள் பிறக்கும்.

கொன்றவரது மறுபிறவிகளிலும் இதே போன்றஜாதக நிலையில்பிறப்பார்.


காலசர்ப்ப தோஷத்தில் பிறந்த ஒருவர் வாழ்வில் 35 வயதுக்குமேல் தான் சம்பாதிக்க ஆரம்பிப்பார்.யாரிடம் எப்படிப் பேச வேண்டும்? எப்படி பழகவேண்டும்?என்ற ஆளுமைத் திறன் 35 வயதுவரை வராது.திருமணம் 30வயதைக்கடக்கும்.கண்பார்வைத்திறன் குறைபாடு,தலைவலி போன்ற உபாதைகள் நிரந்தரமாக இருக்கும்.

நாகம் எனப்படும் பாம்புகளை அடிப்பதே பாவம்.நாம் வழிபடவே அவை உருவாக்கப்பட்டுள்ளன.(மேல்நாடுகளில் பைபிள் கதைகளில் பாம்பு சாத்தானின் வடிவமாக மதிக்கப்படுகிறது.அவர்கள் இப்பிறவியில் அடுத்த பிறவியில் காலசர்ப்ப தோஷத்தால் அவதிப்படுவர்)

எனக்குத் தெரிந்த ஒருவர், அவரது மனைவி கர்ப்பிணியாக இருக்கும்போது, ஒரு பாம்புப்புற்றை இடித்தும்,கொதிக்கும் தண்ணீர் ஊற்றியும்,அந்தப் புற்றிலிருந்து வெளிவந்த பாம்புகளைக் கொல்லவும் செய்தார்.

அவரது மனைவி பிரசவித்தது முதல் இன்று வரை அவர் படும் மனவேதனைக்கு அளவே இல்லை.ஆம்!அவருக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது.அந்தப் பெண் குழந்தையின் முழு உடலும் பாம்பின் மேல் தோல் போல இருந்தது.இப்போது அந்த பெண்குழந்தை பருவமடைந்துவிட்டாள்.சில லட்சரூபாய்களை செலவு செய்தும் அந்தப்பெண்ணை பெண்ணாக ரசிக்கக்கூட அந்த பெற்றோர்களால் முடியவில்லை.

கி.பி.2003 ஆம் வருடம் அந்த வீட்டுக்கு ஜாதகம் பார்க்கப்போயிருந்தேன்.அந்தப்பெண்ணைப் பார்த்ததும் நான் அழுதே விட்டேன்.அவளுக்கு என எப்படி திருமணம் அமையும் ?என நானே கேட்டுக்கொண்டேன்.

நான் சொன்ன பரிகாரம் இதுதான்:சூரியகிரகணமும்,சந்திர கிரகணமும் வரும் நாட்களில் ஆந்திராவிலுள்ள திருக்காளஹஸ்தி கோவிலில் இருங்கள்.முடிந்தால் அங்கேயே ஓராண்டு தங்குங்கள்.திருக்காளஹஸ்தி சிவபெருமானை வழிபடுங்கள்.அங்கேயே அன்னதானம்,வஸ்திரதானம் செய்யுங்கள்.அந்தப்பெண்ணும்,அவளது அப்பாவும் அந்த ஊரில் உள்ள புற்றுக்களில் வெள்ளி,செவ்வாய்க்கிழமைகளில் பால் ஊற்றி மனப்பூர்வமாக மன்னிப்புக்கேளுங்கள்.என்றேன்.


ராகுகாலங்களில் அம்பாள் சன்னதியில் எல்லாநாளும் வரும் ராகுகாலத்தில் எலுமிச்சையில் தாமரைநூலில் நெய்தீபம் ஏற்றிவாருங்கள்.ராகு காலம் முழுக்க அங்கேயே இருந்து மனப்பூர்வமாக மன்னிப்புக்கேளுங்கள்.

சில வருடங்கள் கழிந்தது.இப்போது அந்தப்பெண் குழந்தையின் உடலின் மேல்தோல் சராசரியாகிவிட்டது.இப்போது மகாலட்சுமிபோல இருக்கிறாள்.

Friday, March 11, 2011

மூன்றின் இரகசியம்......


இந்து மதத்தின் மூன்று முக்கிய அம்சங்கள்
G - Generator ஆக்கல்-பிரம்மா
O - Operator காத்தல்-விஷ்ணு
D - Destroyer அழித்தல்- ருத்திரன்

கிருஸ்துவ மதத்தின் மூன்று முக்கிய அம்சங்கள்
பிதா, சுதன், பரிசுத்த ஆவி

விஞ்ஞானத்தின் முக்கிய அம்சங்கள்
எதிர் மின்னனு (electron)
நேர் மின்னனு (proton)
சமநிலை மின்னனு (neutron)

மின்சாரத்தின் முக்கிய சம்சங்கள்
நேர் துருவம் (positive)
எதிர் துருவம் (negative)
சமநிலை துருவம் (neutral)

ஆன்மீகத்தின் முக்கிய அம்சங்கள்
இடைகலை
பிங்களை
சூட்சும நாடி

அனைத்தும் மூன்றாகவே பிரிக்க பட்டுள்ளன. மனிதர்களில் கூட ஆண், பெண் மற்றும் அலி என்ற பிரிவினைகள் உள்ளன.

ஏன் எல்லாம் மும்மூன்றாக பிரிக்க பட்டுள்ளன என ஆராய்ந்து பாருங்கள்.

சித்தர்களின் மெஞ்ஞானத்தினுள் விஞ்ஞானம்



அவள் = ELECTRON; அவன் = PROTON; அது = NEUTRON







சித்தர்களின் மெய்ஞானத்தினால் கண்ட விஞ்ஞானப் பேருண்மைகளை அலசி ஆராய்ந்து கண்ட உண்மைகளை இங்கு விரித்துக் கூறுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.


அவன் அவள் அது எனும் மூவினைமயிற்

தோற்றிய திதியேஒடுங்கி மலத்து உள

ஆதி அந்தம் என்பனார் புலவர்.


- சிவஞான போதம் முதற்சூத்திரத்தில்

அவள் என்றால் பார்வதி = எலக்ட்ரான்(ELECTRON)

அவன் என்றால் சிவன் = புரோட்டான் (PROTON)

அது என்றால் மாயா = நியூட்ரான் (NEUTRON)

அவன் என்பது சும்மா இருக்கும் (சக்தி இல்லாவிட்டால் சிவனேன்னு சும்மா கிட) , அணுவின் உட் கருவுக்குள் புரோட்டான் சிவனைப் போல் சும்மா இருக்கும் ,(உமா காந்தாய , காந்தாய காமிகார்த்தப் ப்ரதாயினே) அதே சமயம் அணுவின் உட்கருவை சுற்றி வரும் சக்தியான எலக்ரானை இழுத்து வைக்கிறது. இந்த ஈர்ப்பே அணுக்கட்டமைப்பை தீர்மானிக்கிறது.இந்த உலகத்தை கண்ணுக்கு தோற்றம் பெற வைக்கிறது.

சக்தி என்பது இயக்கத்தின் இருப்பிடம்,இயக்கத்தின் பிறப்பிடம், சக்தியின் உறைவிடம்.இது அணுவின் உட்கருவை இடைவிடாமல் சுற்றி வருகிறது.

ஒரு குடத்திற்குள் இரண்டு பந்தைப் போட்டு சுழற்றினாலே ஒன்றை ஒன்று மோதிக் கொள்ளாமலோ தொடர்ந்து இயக்க சக்தி கொடுக்காமல் சுழன்று கொண்டே இருக்கச் செய்யவோ முடியாது.

ஆனால் எலெக்ட்ரானை ஆரம்ப இயக்க சக்தி எங்கிருந்து வந்தது.எங்கேயிருந்து தொடர்ந்து இயக்க சக்தி அதற்கு வருகிறது ,எது இத்தனையும் செய்கிறது.இத்தனை அண்ட பேரண்டங்களையும்,சூரிய,சந்திர நட்சத்திர கூட்டங்களையும் ஒன்றோடொன்று மோதாமல் அந்தந்த நிலைகளில் நிலை நிறுத்துவது எது .இந்த அண்ட பேரண்ட விதி முறைகளை உருவாக்குவது எது.

  ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்து உண்டான ஒன்றை விஞ்ஞானத்தால் அறிய முடியாது அதன் எல்லையைத் தெரிந்து கொள்ள முடியாது. மனிதன் இயற்கையை புரிந்து கொண்டு அதன் விதிகளை நகல் எடுக்க முயற்சித்தால் இயற்கை அதன் விதிகளையே மாற்றிக் கொள்ளும்.

அதையே திருவள்ளுவர்

 

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தான்முந் துறும்.

  இயற்கையான ஊழை (இயற்கை விதிகளை) எது வெற்றி கொள்ளும்? அப்படி ஒன்று வெற்றி கொள்ளுமாறு வந்தாலும் அதன் முன்னர் இயற்கை, தனது இயற்கை விதிகளை மாற்றிக் கூட வெற்றி கொள்ள வந்த ஒன்றை தான் வெற்றி கொள்ளும்,அது விஞ்ஞானமாக இருந்தாலும்.

  ஒரு புரோட்டான் (PROTON) ஐ அதி வேகத்துக்குள்ளாக்கி மற்றொரு புரோட்டான் (PROTON) னுடன் மோதவிட்டால் பெருவெடிப்பின் போது என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் எண்ணி செயல்பட்டார்கள், இயற்கை அதன் விதிகளையே மாற்றிக் கொள்ளும் என்பதற்கேற்ப அங்கே ஒன்றுமே நடக்கவில்லை.

  அந்த புரோட்டான் (PROTON), எலக்ட்ரான்(ELECTRON), நியூட்ரான் (NEUTRON) என்பவை அனைத்தும் உயிரற்ற வஸ்து என நினைத்து செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அஞ்ஞானிகள்.

  புராதான இந்துக்களுக்கும்,சித்தர்களுக்கும் அணுவின் கட்டமைப்பைப் பற்றியும் அவற்றை ஒன்றிலிருந்து (ஒரு உலோகக் கட்டமைப்பில் இருந்து ஒரு உலோகக் கட்டமைப் பிற்கு)ஒன்றிற்கு மாற்றும் வல்லமையும் பெற்றிருந்தார்கள்.

Thursday, March 10, 2011

வள்ளலார் காட்டிய வாழ்வு நெறி



சுகிசிவம்

வடலூர் வள்ளலார் எனும் ஞானஜோதி பற்றிய சம்பவம் ஒன்று சொல்வார்கள். அவர் மண்ணில் ஸ்தூல உடலுடன் வந்தபோதே அவர் மீது பக்தி கொண்ட அன்பர் ஒருவர் வள்ளலாரின் திருமேனியை அப்படியே களிமண்ணால் பொம்மையாகச் செய்து நெருப்பில் சுட்டு, வண்ணம் பூசி அவரிடம் கொண்டு வந்து கொடுத்தாராம். எவரையும் புண்படுத்தவோ அலட்சியப்படுத்தவோ எண்ணாத கருணை மனம் கொண்ட ராமலிங்க வள்ளலோ அந்த பொம்மையை வாங்கி வெகு அலட்சியமாகத் தள்ளி வைத்தாராம்.

அதைக் கண்டு துடித்துப்போனவர் ஏன் சாமீ... அந்த மண் பொம்மையை அலட்சியம் செஞ்சுட்டீங்க என்று வேதனையுடன் கேட்க ‘அப்பா இந்த உடம்பு மண்ணால் தான் பெரும்பாலும் உண்டாகிறது. இந்த மண்ணுடம்பைப் பொன்னுடம்பாக்கும் சாகாக் கலையை உலகுக்கு உரைக்கவே இறைவன் என்னை அனுப்பினான். இதை உணர்ந்து ஆழ்ந்து ஈடுபட்டு இந்த மண்ணுடம்பை பொன்னுடம்பாக்கினேன். நீயோ பொன்னுடம்பை மண்ணுடம்பாக ஆக்கிவந்திருக்கிறாய். பொன் உடம்பாக்கிக் கொள்ளும் இரகசியத்தைக் கற்க எவரும் இல்லையே என்று வருந்தி வரும் வேளையில் நீ பொன்னுடம்பையும் மண்ணுடம்பாக்கினால் நான் எப்படி மகிழ்வேன் என்றாராம்.

யோசிக்க வேண்டிய விஷயம் இது! வள்ளலார் பொன்னுடம்பு பெற்ற இரகசியம் முழுவதையும் நம்மால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. எனினும் நாடிசுத்தி செய்து உடல் அழுக்கு (கார்பன்) நீக்கி சுவாசத்தை ஏதோ ஓர் அளவில் ஒழுங்கு படுத்துவதன் மூலம் நரை திரை மூப்பு முதலான நோய்களின்றி உடம்பு பொன்னாகிறது என நூற்றுக்கணக்கான சித்தர் பாடல்கள் மூலம் யூகிக்க முடிகிறது. வள்ளலார் உடம்பு பொன்னுடம்பு என்பதை வாரியார் சுவாமிகள் தனது சுய சரிதத்தில் எழுதுகிறார்.

வடலூரில் சக்திய ஞானசபை திருப்பணித் தொடக்கத்தில் ஒருநாள் சத்திய ஞான சபையின் அர்ச்சகர் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியரின் இல்லத்துக்கு உணவு அருந்தச் சென்றிருந்தேன். பாலசுப்பிரமணிய சிவாச்சாரியர் நேர்மையானவர் வள்ளலாரின் சீடரான சபாபதி சிவாச்சாரியரின் பேரன்.

அவரின் தாயார் நடையில் அமர்ந்திருந்தார் நான் அவரை வணங்கி அவருக்கு அருகில் அமர்ந்தேன். பெரியதம்மா வணக்கம் தாங்கள் ராமலிங்க அடிகளாரைப் பார்த்திருக்கிaர்களா என்று ஆவலுடன் கேட்டேன். அவர் சிரித்தமுகத்துடன் அப்போது எனக்கு ஐந்தரை வயது எங்கள் தாத்தா ஆடூர் சபாபதி சிவாச்சாரியரைக் காண சந்நிதானம் (வள்ளலார்) வருவார் என் தோள்களைப் பிடித்து குட்டிப் பெண்ணே குட்டிப்பெண்ணே என்று கூப்பிட்டுக் கொஞ்சி விளையாடுவார். அப்போது அவரது திருமேனியில் இருந்து பச்சைக் கற்பூர வாசனை வீசும். அவருடைய சிரத்தில் உள்ள முக்காடு விலகும் போது மின்னலைப் போன்ற ஞானஒளி வீசும். அப்போது சந்நிதானம், தலையில் உள்ள முக்காட்டுத் துணியை இழுத்து மறைத்துக் கொள்வார் என்றார். இதைக் கேட்டு அளவற்ற மகிழ்ச்சியும் அதிசயமும் அடைந்தேன்’ என்கிறார்.

பொன்னுடம்பு பெற்ற வள்ளலார். கடவுளை ஆறு வேளை அதாவது சூரியோதயம் உச்சிப் பொழுது சாயரட்சை மாலை, யாமம் மற்றும் வைகறையில் தியானம் செய்ய வேண்டும் என்று உபதேசிக்கிறார். அந்த தியானம் எப்படி அமைய வேண்டும் என்பதை விளக்கும் போது எக்காலத்திலும் புருவ மத்தியின் கண்ணே நமது காரணத்தைச் செலுத்த வேண்டும் என்று தெளிவுபடுத்துகிறார்.

புருவமத்தி என்பது சுழுமுனை நாடி அந்தக் கரணம் அதாவது மனம் புத்தி என்கிற இடது வலது சுவாசங்களை ஒருமுகப்படுத்துவது என்பதன் மூலம் பொன்னுடம்பைப் பெறுவதையே சுட்டுகிறார் என்று கொள்ளலாம். சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் என்ற மூன்று ரகசியக் குறியீடுகளைத் திருவருட்பாவில் பல இடங்களில் அவர் வெளிப்படுத்துகிறார். சாகாத்தலை என்பது இறப்பற்ற பெருநில அதாவது மரணமிலாப் பெருவாழ்வு வேகாக்கால் என்பது காற்று பற்றிய இரகசியம் (கால் என்பது காற்றைக் குறிக்கும் சொல்), வெந்து அழியாத பிராணயவாயுவே வேகாக்கால் தீய்த்துக் கெடுக்கப் படாத பிராணனாகிய காற்று - உடம்பு முதிர்ந்து வாடிக் கெடாதபடி பிராணனை அடக்கும் வித்தைதனை அறிந்தால் மரணம் இல்லை என்கிறார்.

சாகாக்கல்வி என்பதை நமக்குக் கொட்டித் தந்தவர்கள் தமிழகத்துச் சித்தர்கள் அவர்கள் சொன்ன வழிமுறைகளை எல்லாம் சுருக்கிச்சொன்னால் மூன்று வழிகள் கிடைக்கின்றன. ஒன்று இரசவாத முறை அடுத்தது குண்டலினி யோகம், மூன்றாவது உலடா சாதனை எனும் தலை கீழ்ப் பயிற்சி முறை எனும் மறித்தேற்றும் முறை எனப் பட்டியலிடுகிறார் பேராசிரியர் டி. என். கணபதி.

பாதரசம், கந்தகம் காக்கைப் பொன் என்கிற மைக்கா ஆகிய வேதிப் பொருட்களைப் பயன் படுத்தி இரசாயன யுக்திகளால் (கெமிக்கல்) சாவா நிலைக்கு முயற்சி செய்துள்ளனர். குண்டலினி யோகத்தில் முன்சொன்ன வேதிப்பொருட்களுக்கு பதிலாக நம்முடைய உடலில் தலையில் சகஸ்ராரத்தில் ஊறிவரும் உயிர்ச்சாறு பருகுவது விளக்கப்படுகிறது. இதனை மெய்யாகம் என்கிறார் திருமூலர்.

தமிழ்ச் சித்தர் மரபு என்கிற நூலில் பேராசிரியர் டி. என். கணபதி அழகாக இது குறித்து விளக்குகிறார். ஓர் இரும்புத் துண்டை நீரில் போட்டால், அது மூழ்கிவிடுகிறது. ஆனால் அதே இரும்புத் துண்டைக் கொண்டு, படகு செய்து நீரில் மிதக்க விட முடிகிறது. கடலைக் கடக்க உதவுகிறது. அதேபோல் பிண்ட நிலையில் ஒரு கரையில் இருக்கும் ஆன்மாவை மறுகரையில் அண்ட நிலையில் இருக்கும் பரமான்மாவுடன் இணைக்கிற படகாக இந்த உடம்பு பயன்படுகிறது. மூழ்கும் இரும்பை மூழ்காத படகாக்குவது போல் அழியும் உடம்பை அழியா உடம்பாக்கும் விந்தையே குண்டலினி யோகம்.

அடுத்து மறித்தேற்றம் முறை சித்தர்களால் சித்தர்களுக்கு மட்டுமே புலப்படுத்தப்படும் இரகசியம் இது விந்துவை மறித்து மேலேற்றும் முறை இந்த உல்டா சாதனையை நாத சித்தர்கள் பயில்கிறார்கள். இந்த உயரத்துக்கெல்லாம் பாயாவிடினும் காற்றைக் கையாளும் கலையை அறிந்தால் வலுவான பொலிவான உடலும் உள்ளமும் ஆன்மாவும் நம் வசமாவது உறுதி வள்ளலார் சாகாத்தலை வேகாக் கால் என்கிறார்.

வேறு சில சித்தர்களோ சிறிது மாற்றி சாகாக்கல் வேகாத் தலை என்கின்றனர் சாகாக்கால் என்று பிராணாயாமத்தையே பேசுகின்றனர். வேகாத்தலை என்பது சகஸ்ராரமாகிய தலையில் ஊறும் அமிழ்தைக் குறிக்கிறது. ஆக கால், தலை ஆகிய இந்த இரண்டும் நமக்குப் புரிபடாததால், ‘தலைகால் தெரியாமல் ஆடுகிறான்’ என்று ஜாடை பேசினர்.

இதேபோல், விட்டகுறை தொட்ட குறை என்கிற பரிபாஷை மூச்சை நாசிவழி விட்ட குறை என்றும் நடுவில் மறித்து ஏற்றி சுழுமுனையில் பாயவிடுவதே தொட்ட குறை என்றும் பொருளாகிறது என தமிழ்ச் சித்தர் மரபு நூல் விளக்குகிறது.

சிவசாக்கியர் எனும் சித்தர் கிராமத்து உதாரணம் ஒன்றின் மூலம், ‘அடேய் நீ காதலித்துக் கல்யாணம் செய்த உன் மனைவியை ஒரு ரவுடி கண் வைத்து அவளை என்னிடம் அனுப்பு என்றால், நீயே கொண்டு போய் அவனிடம் சேர்ப்பாயா? வெட்டிவிடுவேன் என்று புறப்படுவாய் அல்லவா! அதேபோல், நாம் ஆசை ஆசையாக வளர்த்த இந்த உடம்பை அந்த எமன் கண்வைத்து ஓலைவிட்டதும் மயானம் வரை கொண்டு போய்ப் போடலாமா? முட்டாள் காலனைக் கபZகரம் பண்ண வேண்டாமா? என்கிறார்.

வடிவு கண்டு கொண்ட பெண்ணை

வேறொருவன் நத்தினால் விடுவனோ

அவனை முன்னர் வெட்ட வேண்டும் என்பனே

நடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல்லுடல்

சுடலைமட்டும் கொண்டு போய்த் தோட்டிகைக் கொடுப்பரே’

என்ன அழகான உவமை? ஆனால் அதைத் தடுப்பது எப்படி எனும் கேள்வி வரும் இப்படிக் கேட்பவருக்குத் திருமூலர் பதில் சொல்கிறார். ‘காற்றைப் பிடித்த தால் கூற்றை (எமனை) உதைக்கலாம்!

சித்தர் கல்வி சாகாக் கல்வி




சித்தர் கல்வி என்பது நமது உடல், மனம், ஆன்மா இவற்றை சுத்தப்படுத்தி ஒளியாக்கி பேரான்மாவிடம் கலப்பது ஆகும்.

1.இக்கல்வியை கற்றால் இறப்பை தவிர்த்து ஒளி உடல் பெற்று மரணத்தை வெல்லலாம். இதற்கு “வாசி" யோகம் செய்து 72,000 நாடி-நரம்புகளை சுத்தம் செய்ய வேண்டும். அப்படி செய்து ஒளி உடல் பெற்றால் அதுதான் “முக்தி” நிலையாகும். அதன் பின் மரணம் கிடையாது. இது தான் சாகாக் கல்வியாகும்.
2.இப்பிறப்பில் சிலர் பல பட்டப்படிப்பு படித்து விடுவார்கள். அவர்கள் இறந்து மீண்டும் அடுத்த பிறவியில் ஆரம்பக்கல்வியிலிருந்து படிக்கவேண்டும். ஆனால் சித்தர் கல்வியை ஒருவர் கற்றுக்கொள்ளும் போது அவர் சூழ்நிலை, உடல்நிலை காரணமாக இறக்க நேர்ந்தால் அவர் அப்பிறவியில் 35,000 நாடி நரம்புகளை சுத்தம் செய்து இருந்தால், அடுத்த பிறவியில் 35,000 நாடி நரம்புகளில் இருந்து தான் தொடங்கும். ஆகவே ஏற்கனேவே போன பிறவியில் கற்ற சித்தர் கல்வி மறுபிறவியிலும் தொடர்கிறது. ஆகையால் இது சாகாக் கல்வியாகும்.
3.ஒருவர் இப்பிறவியில் சித்தர் கல்வியை கற்றுக் கொள்ளும் போது பிராணசக்தியை அதிகப்படுத்தி உடலை சுத்தப்படுத்தும் போது, நம்முடைய தேகம் ஒளிநிலையை அடைந்தால் இறப்பு கிடையாது. ஆகவே இறப்பு இல்லாததால் இது சாகாக் கல்வியாகும்.
•சுவாசம்
•பிராணாயாமம்
•தியானம்
•மனம்
•மணி
•உயிர்
சுவாசம்
சுவாசம் என்றால் காற்றை உள்ளே இழுத்து வெளியே விடுவது என்று கூறப்படுகிறது. மூக்கின் இரண்டு துவாரங்களிலும் சுவாசம் நடைபெறுகிறது. வலது நாசி துவாரத்தின் மூலம் நடைபெறும் சுவாசத்தை சூரிய சுவாசம் என்றும், இடது நாசி துவாரத்தின் மூலம் நடைபெறும் சுவாசத்தை சந்திர சுவாசம் என்றும் கூறப்படுகிறது. சுவாசமானது வலது நாசியில் தொண்ணூறு சதவிகிதம் நடைபெறும் போது, இடது நாசியில் பத்து சதவிகிதம் நடைபெறும். அப்போது உடலில் வெப்பத்தன்மை இருக்கும். அதனால் இதனை சூரிய சுவாசம் என்று கூறுவர். இதேபோல் இடது நாசியில் தொண்ணூறு சதவிகிதம் நடைபெறும் போது, வலது நாசியில் சுவாசம் பத்து சதவிகிதம் நடைபெறும். அப்போது உடலில் குளிர்ச்சியான தன்மை, மிதமான வெப்பம் இருக்கும். அதனால் இதனை சந்திர சுவாசம் என்று கூறுவர்

இரண்டு நாசி வழியாகவும் சரிசமமாக நடைபெறும் சுவாசத்தை சுழிமுனா சுவாசம் என்று கூறுவர். இந்த சுவாசம் நடைபெறும் போது நமது உடலில் வெப்பம், குளிர்ச்சித்தன்மை இல்லாமல் அதிக வெப்பநிலை இருக்கும். அதனால் இதனை சுழிமுனா சுவாசம் என்று கூறுவர்.

இந்த மூன்று சுவாசங்கள் நமது உடல் முழுவதும் பரவுகிறது. சூரிய சுவாசமானது மூக்கின் வலது நாசி துவாரத்திலிருந்து இடது கால் வரை 16 ஸ்தானங்கள் ஆக 32 ஸ்தானங்கள் ஏறி இறங்குகிறது. அதே போல் சந்திர சுவாசமானது மூக்கின் இடது நாசி துவாரத்திலிருந்து வலது கால் வரை 16 ஸ்தானங்கள் ஆக 32 ஸ்தானங்கள் ஏறி இறங்குகிறது. ஆனால் சுழிமுனா சுவாசமோ மூக்கின் நுனியிலிருந்து கால்வரை உடல் முழுவதும் பரவி செல்கிறது. இவையே நமது உடலில் மூன்று சுவாசங்களின் செயல்பாடாகும்.

Top


--------------------------------------------------------------------------------

பிராணாயாமம்:
Iஉலக வழக்கில் பிராணாயாமம் என்றால் சுவாசத்தை சரிசெய்யக்கூடிய பயிற்சி என்று கருதப்படுகிறது. அதாவது மூன்று சுவாசங்களையும் சரிவர (ஒரே அளவாக) ஓடச்செய்வது தான் பிராணாயாமம் என்று கருதப்படுகிறது.

மேலும் இதன் மூலம் உடலுக்கு, காற்றிலிருந்து கிடைக்கக்கூடிய பிராண சக்தியின் அளவு அதிகமாக கிடைப்பதாக கருதப்படுகிறது. இது உண்மையில் பிராணாயாமம் என்று சொல்வதைவிட சீரான சுவாசப்பயிற்சி என்று மக்களால் கருதப்படுகிறது. அதனால் தான் மக்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், யோகசனம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். ஏனென்றால் இவையனைத்தும் சுவாசத்தை சீராக வைத்துக்கொண்டு, தேகம் சீராக இயங்க உதவுகிறது

ஆனால் உண்மையில், பிராணயாமம் என்பது சுவாசத்தை மட்டும் சீராக வைத்திருக்க உதவும் ஒரு விஷயமாக இல்லாமல், சுவாசக்கலைகள், தேகம், மனம்,உயிர், ஆன்மா போன்ற அனைத்தையும் சரிவர இயங்க உதவிப்புரியும் ஒரு பயிற்சியாக இருக்கிறது. ஆனால் காமம், கோபம், குரோதம், பொறாமை போன்ற அவஸ்தைகள் மூலம் சுவாசம் கட்டுப்படாமல் போகிறது. அதனால் நாம் உயிராற்றலை இழக்கிறோம்.

பிராணாயாம பயிற்சி என்றால் நமது உடலில் சூரியன், சந்திரன், சுழிமுனா என்ற மூன்று சுவாசங்கள் நடைபெறுகிறது. இந்த சுவாசங்களை ஒரே கலையாக்கி பிராணாயாம பயிற்சி செய்யும்போது அங்கு உயிராற்றல் அந்த சுவாசத்தோடு கலந்து உடல் முழுவதும் சென்று எல்லா நாடி நரம்புகளையும், உறுப்புகளையும் பலப்படுத்திகிறது. இதனால் உடல் ஆரோக்கியம் பேணப்படுகிறது. இப்பயிற்சியில் மட்டும் தான் மற்ற பிராணாயாம பயிற்சியைவிட உயிராற்றல் அதிகமாக உற்பத்தியாகிறது.

அதனால் மனதால், காமம், கோபம் குரோதம், பொறாமை போன்ற உணர்வுகளை கட்டுப்பாடாக வைத்திருக்க உதவுகிறது. அதனால் இந்த உணர்வுகளின் மூலம் உயிராற்றல் செலவாகாமல் இருக்கிறது. ஆகையால் சுவாசத்தில், உயிராற்றலை கலக்கக்கூடிய பயிற்சிதான் பிராணாயாமம் என்பதாகும். இந்த பயிற்சியை சித்தர்கள் செய்து வந்தனர். சித்தர்கள் பரிபாஷையில் இந்த பயிற்சிக்கு "வாசி" என்று பெயர். அதனால் தான் இந்த பிராணாயாம பயிற்சியை நாங்கள் "வாசி" என்றே அழைக்கிறோம்.

Top


--------------------------------------------------------------------------------

தியானம்
தியானம் என்றால் மனதை ஒருநிலை படுத்துவதாகும். சரி மனதை எதில் ஒருநிலை படுத்துவது?

காற்றுக்கு ஒப்பிட்டு மனதை நமது சித்தர்கள் கூறி இருக்கிறார்கள். பஞ்ச பூதத்தில் காற்று மனமாக சித்திரிக்கப்பட்டு இருக்கிறது. ஆகையால் காற்று வடிவமான மனம் அலைபாய்கிறது. அப்போது அதை நிறுத்தினால், நிதானமாக சிந்திக்கக்கூடிய ஆற்றல் கிடைக்கும்.

மனதை எதில் நிலைபெறச் செய்யவேண்டும்?

மனதை உடலில் ஓர் இடத்தில் நிற்க வைத்தால் அங்கு வெப்பம் உண்டாகும். அப்போது அங்கு உயிராற்றல் வந்து அதனுடன் கூடி, மனம் ஒரு திட நிலை பொருள் போல உருவாகி, மணிப்போன்று உருவாகி, நமதுஉடலில் உள்ள அனைத்து உணர்வுகளும், எண்ணங்களும் அதில் சேர்ந்து அந்த மணியை, அதாவது மனதை உணர ஆரம்பிக்கும். அது ஒரு மணியை போல விளங்கும். இதை உருவாக்கும் நிலைக்குத்தான் தியானம் என்று பெயர்.

அப்போது மனதில் எண்ணங்கள் பல இல்லாமல், ஒரே எண்ணம் அந்த உணர்வில் மட்டும் தான் இருக்கும். இந்த தியானப் பயிற்சி தான் எந்த ஒரு விஷயத்தில் மனத்தை செலுத்தினாலும், மனம் அதில் ஒன்று பட்டு, நிலைத்துநின்று, அந்த விஷயத்தில் தெளிவான முடிவை எடுக்க உதவும். மேலும் நமக்கு வரும் துன்பங்களை எதிர்கொண்டு வெற்றி அடைய முடியும். இதுதான் தியானத்தின் பலன் ஆகும்.

மனதை உயிராற்றலில் ஒன்றுப்படுத்துதல் தியானம் ஆகும். தியானத்தின் பலன் ஆறாவது அறிவை, ( மணி உருவாக்குவதை ) அறிவது ஆகும்.

மணியை உற்பத்தி செய்பவன் மனிதன் ஆகிறான்.

Top


--------------------------------------------------------------------------------

மனம்:
மனம் என்றால் பஞ்ச பூத அம்சங்களில் ஒன்றான காற்று ஆகும். காற்றானது இந்த பூமியை எப்படி சுற்றி ஒரு கவசம் போல் இருக்கிறதோ, அதுபோல நமது மனமும் நமது எல்லா உணர்வுகளையும், உடலையும் சூழ்ந்துள்ளது. ஆகவே எல்லா விதமான உணர்வுகளும், செயலும் ஐம்புலன்களும் மனதின் வழியே செயல்படுகிறது. இந்த மனம்தான் பார்க்கிறது, கேட்கிறது, ரசிக்கிறது, உணர்கிறது, சுவைக்கிறது, நுகர்கிறது. இப்படி செயல்படுகிற மனம் ஒவ்வொரு பிறவியிலும் ஓர் அனுபவத்தை பெறுகிறது.

•ஓர் அறிவாய் இருக்கின்றபோது உணர்வை பெறுகிறது.
•ஈரறிவாய் இருக்கின்றபோது உணர்கிறது மற்றும் நுகர்கிறது.
•3வது அறிவாய் இருக்கின்றபோது உணர்வு, நுகர்வு மற்றும் கேட்கிறது.
•4வது அறிவாய் இருக்கின்றபோது உணர்வு, நுகர்வு, கேட்பது மற்றும் பார்க்கிறது.
•5வது அறிவாய் இருக்கின்றபோது உணர்வு, நுகர்வு, கேட்பது, பார்ப்பது மற்றும் சுவைப்பது,
•6வது அறிவாய் இருக்கின்றபோது உணர்வு, நுகர்வு, கேட்பது, பார்ப்பது, சுவைப்பது மற்றும் சிந்திப்பது.
இப்படி ஒவ்வொரு அறிவிலும் ஒவ்வொரு அனுபவத்தைப் பெற்று, மனித பிறவியில் ஆறு அறிவை பெறுகிறது. ஆறாவது அறிவாகிய சிந்தித்தல் என்றால் மனதை ஒருநிலைப் படுத்தி, அதனுடைய சக்தியை உணர்வது. இதுதான் ஆறாவது அறிவு. இந்த அறிவை முழுமையாக பெறுவதற்கு பிராணாயாமம், தியானம் செய்ய வேண்டும். இவற்றிற்கெல்லாம் காரணம் மனம்.

ஆகவே இந்நிலையை பெறாத மற்ற மனிதர்கள் மிருகங்கள் போல் சாப்பிடுவது, உறங்குவது என சிந்தித்தலைத் தவிர மற்ற விஷயங்களில் ஈடுபடுகின்றனர். இப்படி ஏன் என்றால், இந்த மனதின் பயணம் ஓர் அணுமுதல் புலன்களின் இச்சை வழியே நடந்து வந்ததால் மனிதன் ஆன பிறகும் அந்நிலையில் இருந்து விலகாமல், அதே நிலை தொடர்கிறது. ஆகவே மனித வாழ்க்கையில் அவனது மனம், காமம், குரோதம், லோபம், மதம், மாச்சரியம், டம்பம், பொறாமை, மோகம் ஆகிய இந்த எட்டு அவஸ்தைகளும், ஐம்புலன்களும் சேர்ந்து மனத்தை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறது.

ஆகவே மனதை இதனிடம் இருந்து பிரித்து எடுப்பது தான் ஆறவாது அறிவின் செயலாகும். மனிதன் இதை பயன்படுத்தாத வரைக்கும் மிருகத் தன்மையோடுதான் வாழ்ந்து வருகிறான். ஆகவே இந்த உணர்வுகளை மனம் மற்றவரிடம் செயல் படுத்தி பார்த்து இன்பம் அடைகிறது. இதனால் மனிதன் தன்னுடைய நிலையில் இருந்து உயர்வதற்கு வழி, புலன்களையும், மனதையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும். அப்போது மனத்தின் சக்தியையும், இறையாற்றலையும் உணர்ந்து தன்னுடைய நிலையை உயர்த்திக் கொள்ள முடியும். இதுதான் மனதின் செயல் ஆகும்.

குறிப்பு: மனிதனுக்கு காமத்தின் மீது மட்டும் ஏன் அதீத ஈடுபாடு என்றால், எல்லா பிறவிகளிலும் இனப்பெருக்கத்திற்காக அதிக அளவில் செயல்படும் உணர்வு காமம் தான். ஆகவே தான் மனிதப்பிறவியில் அதே நிலையில் இருப்பதால்தான் இறைத்தன்மையை அறியமுடியாமல் தவிக்கிறது.

மனதின் செயல் - மகிழ்ச்சி:

அனைத்து மக்களும் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க விரும்புகின்றனர். ஆனால் அந்த சந்தோஷம் உலக பொருட்களில் இருப்பதாகவே எண்ணுகின்றனர். ஆனால் அந்த ஒரு பொருளானது, அந்த சந்தோஷத்தை சில நிமிடங்கள், சில மணி நேரம், சில நாட்கள் அல்லது சில ஆண்டுகள் என இந்த வரையறைக்குள் தான் அது சந்தோஷத்தைக் கொடுக்க முடியும். ஆனால் உலகம் இப்படி பல பொருட்களை தன்னிடத்தே வைத்துக் கொண்டு சந்தோஷமாக இருப்பதாக எண்ணிக்கொண்டு, போட்டியும், பொறாமையும், துன்பங்களையும், தீய எண்ணங்களையும் உண்டாக்கி இன்பமாக இருப்பதாக எண்ணிக்கொண்டு மரணத்தை நோக்கி தன்னுடைய பயணத்தை தொடர்கிறது.

இந்த உலக வாழ்க்கையில் ஒரு வீடு வாங்குவதும், ஒரு கார் வாங்குவதும் தான் நமக்கு தகுதி என்று எண்ணிக்கொண்டு படித்தவர்களும், படிக்காதவர்களும் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் செயல் ஒரு மனிதனுக்கு உள்ள தகுதியை நிர்ணயிக்காது. ஆனால் போட்டியும், பொறாமையும், தீய எண்ணங்களுடனும் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் போட்டியும், பொறாமையும், தீய எண்ணங்களும் இல்லாமல், இந்த உலக பொருட்களை வைத்துக்கொண்டு மிக மிக இன்பமாக வாழ நமக்கு ஓர் தகுதியான நிலையை நாம் நமக்கு ஏற்படுத்த வேண்டும். இந்த தகுதி எதுவென்றால் பிற பொருட்களின் மூலம் வரக்கூடிய எண்ணங்களை அலசி ஆராயக்கூடிய மனப்பக்குவம் தேவை.

இந்த மனப்பக்குவதிற்கு மருந்து எது என்றால் மனத்தை ஒருநிலைப் படுத்துவது. மருந்து என்று ஏன் கூறினேன் என்றால், பொதுவாகவே மருந்து என்றால் சிறிது கசப்புத் தன்மை உடையது தான். ஆனால் அது தான் நோயைத் தீர்க்கும். அது போல் உங்கள் மனமானது உலக விஷயங்களில் இருந்து மனதை பக்குவப்படுத்திக் கொள்வதினால் தான் , மனமானது ஒரு பொருளிலிருந்து ஏற்படக் கூடிய எண்ணங்களை அலசி ஆராய்ந்து, (அதாவது) அந்த பொருளினால் ஏற்படக்கூடிய இன்பங்கள், துன்பங்கள், போட்டிகள், பொறாமைகள் போன்ற நிலைகளை ஆராய்ந்து முடிவெடுக்கும். அப்போது தான் நமக்குள் இருக்கூடிய சந்தோஷமான சூழ்நிலை உருவாகும்.

அதாவது எப்படி என்றால் கோபம், பொறாமை, தீய எண்ணங்கள், துன்பம் இவற்றில் சந்தோஷத்தை கலப்பது. இந்த குணங்கள் இருந்தாலும் சந்தோஷமான மனநிலை ஏற்படும். போட்டியும், பொறாமையும் மனதில் இருந்தாலும் அதை உடனே நீக்குவதற்கு இந்த சந்தோஷம் உதவும். எந்த சந்தோஷம் என்றால் மனதை ஒருநிலைப் படுத்துவதால் ஏற்படக்கூடிய சந்தோஷம், (ஆனந்தம்). இந்நிலையில் இருந்தால் உலக வாழ்க்கையில் வெற்றி பெறலாம். ஞான வாழ்க்கையை அடையலாம்

Top


--------------------------------------------------------------------------------

மணி:
மணி என்பது யோகம் பயில்பவர்களுக்கு ஒரு முக்கியமான தகுதியை கொடுக்கக்கூடிய நிலையாகும்.

மணி என்றால் என்ன?

மணி என்றால் ஒரு திடநிலையில் உள்ள ஒரு பொருள் என்று நாம் அறிவோம். அதுபோல் நாம், நம்முடைய மனதை ஓர் இடத்தில் நிலைபெற செய்யும் போது அந்த இடத்தில் மனம், காற்றின் வடிவாமாக இருக்கிறது. அப்போது அங்கு உயிராற்றல், மனம் நிற்கும் இடத்தில் வந்து சேர்கிறது. அந்த நிலையை, அந்த உயிரற்றலை நம்மால் உணர முடியும். அப்பொழுது அந்த இடத்தில், மனம் ஒரு உருண்டையான வடிவத்தை உணர்கிறது. அதற்கு பெயர் தான் மணியாகும்.

இது எப்படி உருவாகுகிறது என்று பார்ப்போம். முதலில் மனதை ஒரு இடத்தில் நிறுத்தும் போது எண்ணங்கள் கட்டுப் படுகிறது. அப்பொழுது ஒரே ஒரு எண்ணம் மட்டும் தான் இருக்கும், அது என்னவென்றால், மனதை ஒரு இடத்தில் நிறுத்துகிறோம் என்ற எண்ணம் தான் இருக்கும். நமது மூக்கின் வழியாக ஓடக்கூடிய சுவாசம் ஆனது மெதுவாக உடலுக்குள்ளே ஓட ஆரம்பிக்கும். அப்பொழுது உயிராற்றல் அந்த இடத்தில் சுவாசத்துடன் கலக்கும், உடல் சிறிது வெப்பம் அடையும். அடுத்ததாக நம் உடலை இயக்கக்கூடிய தசவாயூக்களும் (10 வித வாயூக்களும்) மெதுவாக வெப்பம் அடைந்து அந்த வாயுக்களும் உயிராற்றலை பெற்று அனைத்து ஆங்ஞா சக்கரமும் இயங்கி கொண்டிருப்பதால், மனம் ஒளிநிலையை அடைகிறது, அப்பொழுது அவஸ்தைகள் குறைவதால் எண்ணங்கள் கட்டுப்படுகிறது. அதனால் நாம் எந்த விஷயத்திலும் விருப்பு-வெறுப்பு இன்றி நிதானமாக செயல்பட முடிகிறது. இதன் மூலம் நம் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளில் வெற்றிக்கொண்டு அமைதியாக வாழ முடிகிறது.

ஆகவே மணி உற்பத்தி ஆவதன் மூலம் வாழ்க்கையை அமைதியாக நடத்துவது தான் இறைநிலையை அடைய முதல் படியாகும்

Top


--------------------------------------------------------------------------------

உயிர்:
பஞ்ச பூதங்களின் கூட்டு தான் உயிராகும். நீர், நெருப்பு, காற்று, பூமி, ஆகாயம் இந்த கூட்டுக் கலவையில் உள்ள அணுக்கள் ஒன்று சேர்ந்து ஓர் உயிராக உருவாகிறது. இது எப்படி என்றால், ஓர் விதையை மண்ணில் போட்டு தண்ணீர் ஊற்றி அது வளர்கிறது. அது வளர்வதற்க்கு தேவையான பொருட்களாக மண், நிலம், நீர், காற்று, வெப்பம், சூரிய ஒளி, சந்திர ஒளி அவை சேர்ந்ததே திறந்த வெளியான ஆகாயமாகும்.

இதில் ஒரு உயிர் உற்பத்தியாவதற்கு பஞ்ச பூத சக்தி எப்படி உதவுகிறது என்று நமக்கு தெரிகிறது. பல உயிரினங்களாக இந்த பஞ்ச பூத சக்தி உருவெடுத்து, கடைசியில் மனித ரூபம் எடுக்கிறது. அப்போது பஞ்ச பூத சக்தியின் நிலை என்ன என்றால் காற்றானது மனமாகவும், தண்ணீரானது உயிராகவும்,நெருப்பானது உடல் இயங்கும் சக்தியாகவும், மண் என்பது உடலாகவும், ஆகாயம் என்பது ஆத்மா இருக்கும் இடமாக விளங்குகிறது. இதுதான் மனித ரூபம். இது அனைத்தும் சேர்ந்து ஓர் மனித உயிராக உருவெடுக்கிறது

Monday, March 7, 2011

transmigration of souls


transmigration of souls or metempsychosis (mətĕm'səkō`sĭs) [Gr.,=change of soul], a belief common to many cultures, in which the soul passes from one body to another, either human, animal, or inanimate. The Australian aborigines believe that an infant is a reincarnation of deceased ancestors and that the soul is continually reborn. Some Indonesian peoples hold that ancestral souls reside in sacred animals, sometimes in preparation for a new incarnation. Similarly, several tribes in western Amazonia avoid eating certain animals, such as deer, because they believe ancestral souls have entered the animals' bodies.
Metempsychosis is a fundamental doctrine of several religions originating in India. In Hinduism Hinduism , Western term for the religious beliefs and practices of the vast majority of the people of India. One of the oldest living religions in the world, Hinduism is unique among the world religions in that it had no single founder but grew over a period of 4,000
..... Click the link for more information. , the individual soul enters a new existence after the death of the body. The sum total of past moral conduct, or karma karma or karman , [Skt.,=action, work, or ritual], basic concept common to Hinduism, Buddhism, and Jainism. The doctrine of karma states that one's state in this life is a result of actions (both physical and mental) in past incarnations, and
..... Click the link for more information. , determines the condition of the soul and the quality of its rebirth. The cycle of rebirth is eternal unless the soul is released by knowledge or arduous effort (see yoga yoga [Skt.,=union], general term for spiritual disciplines in Hinduism, Buddhism, and throughout S Asia that are directed toward attaining higher consciousness and liberation from ignorance, suffering, and rebirth.
..... Click the link for more information. ). This release (moksha or mukti) is a form of salvation, and is possible only for the most devout. Buddhist doctrine does not accept the soul or transmigration as such, treating both as illusory. Rather, there is an eternal, undifferentiated stream of being (samsara). Out of this, existences are produced and prolonged according to karma, or past actions. The individual is not a separate entity, but rather a grouping of elements. They revert to the original primal stream when desire, the cause of the transmigratory cycle, ceases. Only devout Buddhists or saints (i.e., those who abandon all desire) are able to realize this oneness.

The Celtic version of metempsychosis does not have the ethical aspect of its Indian counterpart. The Druids of Gaul supposedly taught that after death the soul left one body to enter another, but the second body was not necessarily earthly; little else is known of their beliefs. Examples of metempsychosis in pre-Christian Irish legends indicate that these transmigrations occurred only in the lifetime of heroes. The belief in transmigration was rare in ancient Egypt, although occasional instances occur of a soul uniting with a god, a soul entering an animal for a lifetime, or a voluntary metamorphosis of a person into another form for his own benefit.

The Greek version, an indigenous product, appeared in the Orphic Mysteries Orphic Mysteries or Orphism, religious cult of ancient Greece, prominent in the 6th cent. B.C. According to legend Orpheus founded these mysteries and was the author of the sacred poems from which the Orphic doctrines were drawn.
..... Click the link for more information. , but its best-known proponent was Pythagoras Pythagoras , c.582–c.507 B.C., pre-Socratic Greek philosopher, founder of the Pythagorean school. He migrated from his native Samos to Crotona and established a secret religious society or order similar to, and possibly influenced by, the earlier Orphic cult.
..... Click the link for more information. . He believed that souls were reincarnated in various bodily shapes. Empedocles, in his poem Purification, accepted Orphic and Pythagorean beliefs. Plato's views on metempsychosis are derived from these same sources. Plotinus believed that future destiny depended upon the life of the soul in previous incarnations. It is possible that these beliefs were influenced by contact with Indian religion.

Jewish treatment of metempsychosis, as found in the kabbalah kabbalah or cabala [Heb.,=reception], esoteric system of interpretation of the Scriptures based upon a tradition claimed to have been handed down orally from Abraham.
..... Click the link for more information. , was limited by the need to conform to orthodox scriptures, and the theory of transmigration was tolerated rather than approved. The Jewish theories, derived mainly from Gnostic, Manichaean, and Neoplatonic sources, teach that man has absolute free will, but that his soul is tied and sullied by contact with matter. Demon (imperfect) souls try to prevent the fulfillment of the finite divine plan. To act out this plan, the spotless souls descend from their original abode in heaven and are incarnated. Punishment and atonement for sins is achieved by another incarnation; but before this happens, the now impure soul flits about as a disembodied spirit. If the pious suffer, it is believed to be for sins committed in a previous existence. At the end of the cycles, when all the incarnated souls are once again pure, the Messianic period begins. No theories of transmigration are admitted into Christian religion.

ஸ்ரீ சக்கரத்தம்மாள்.....அமானுஷ்யம் வாய்ந்த பெண் சித்தர்


எண்ணற்ற மகான்களால் புனிதமடைந்த பாரத பூமியில், ’ஆன்மாவிற்கு ஆண், பெண் பேதம் என்பது கிடையாது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இறைவனை அடைவதற்கு அது ஒருதடையாக இருக்க வேண்டிய அவசியமில்லை’ என்று வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ சக்கரத்தம்மாள். தியாகமும், யோகமும் இணைந்த ஒன்றாக அவரது வரலாறு விளங்குகிறது.

ஸ்ரீ சக்கரத்தம்மாளின் இயற்பெயர் அனந்தாம்பாள். பொது சகாப்தம் 1854ம் ஆண்டில், வடஆற்காடு மாவட்டத்தில் உள்ள தேவிகாபுரம் என்ற சிற்றூரில் பிறந்தார். தந்தை ஆலய அர்ச்சகர். தேவி உபாசனையில் தேர்ந்தவர். தாயாரோ அனுதினமும் சிவனைத் தவறாது பூஜித்து வந்தவர். இவர்களது குழந்தை என்பதால் சிறுவயதிலேயே அதற்கு இறை அனுபூதி வாய்த்திருந்தது. குழந்தை ஞானச் செறிவுடன் வளர்ந்து வரும் வேலையில் திடீரென்று தாயார் காலமானார். தந்தை அக்கால வழக்கப்படி மறுமணம் செய்து கொண்டார். சிற்றன்னையின் கவனிப்பில் குழந்தை வளர்ந்தது.

லலிதா சகஸ்ரநாமம், ஸ்ரீஸ்துதி போன்றவற்றை தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டு தினமும் ஓதி வந்தாள் சிறுமி அனந்தாம்பாள். கோயிலின் மேல்நிலைக்குச் சென்று தனியாக அமர்ந்து தியானம் செய்வது அவளுக்கு மிகவும் விருப்பமான ஒன்று. சக குழந்தைகளுடன் விளையாடுவதை விட, தந்தையுடன் சென்று ஆலயப் பணிகளில் ஈடுபடுவதே அவளுக்குப் பிடித்திருந்தது.

திடீரென சிறுமிக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை எழும்பூரில் இருந்த கோமளீஸ்வரர் மடத்தின் அதிபதியான சாம்பசிவனுடன் திருமணம் நடந்தது. அப்போது அனந்தாம்பாளுக்கு வயது எட்டு. சாம்பசிவனுக்கோ இருபத்துமூன்று. அவருக்கு அது இரண்டாவது திருமணமும் கூட. பால்ய விவாகம் சகஜமாக இருந்ததால் அக்காலத்தில் திருமணத்திற்கு எதிர்ப்புகள் ஏதும் இல்லை.

மணமாகிச் சென்னைக்கு வந்தாள் அனந்தாம்பாள். சிறுமியான அவள் திருமண வாழ்க்கை பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. நாளடைவில் தன் பொறுப்புக்களையும், கடமைகளையும் உணர்ந்து அதற்கேற்றவாறு நடந்து கொண்டாள். ஆனால் கணவன் சாம்பசிவனோ, மனைவி ஒரு சிறுமி என்பதால் மதிக்காமல் தன் இஷ்டம்போல் வாழ்க்கை நடத்தினார். அவர் தீய நடத்தை உடையவராகவும் இருந்தார். அனந்தாம்பாளுக்குத் திருமண வாழ்க்கை ஒரு கொடிய நரக வாழ்க்கையாக அமைந்தது.

அனந்தாம்பாள் வளர்ந்தார். குமரியானார். ஆனால் அப்போதும் சாம்பசிவன் தனது தீய நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. அனந்தாம்பாளை உளரீதியாகப் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாக்கினார். மிகக் கொடிய துன்பத்தை அவர் அனுபவிக்க நேர்ந்தது. ஆனாலும் தனது இல்லறக் கடமைகளைக் கைவிடவில்லை. அதேசமயம் அவரது ஆன்மீக நாட்டம் நாளுக்கு நாள் வளர்ந்த வண்ணம் இருந்தது. தினந்தோறும் அருகில் உள்ள கோமளீஸ்வரர் கோயிலுக்குச் செல்வார். தியானத்தில் ஈடுபடுவார். லலிதா சகஸ்ரநாமம் சொல்லுவார். இறைவனை வேண்டி, உளம் உருக வழிபட்டு வருவார்.

நாளடைவில் தீயசெயல்களின் விளைவால் படுத்த படுக்கையானார் சாம்பசிவன். அப்போதும் அவருக்கான கடமைகளைச் செய்து வந்ததுடன், தினம்தோறும் ஆலயம் சென்று கணவருக்காகப் பிரார்த்தித்து வரலானார் அனந்தாம்பாள்.

ஒருநாள் கணவர் இறந்து விட்டார். அனந்தாம்பாளுக்கு மொட்டை அடிக்கப்பட்டதுடன், காவி வஸ்திரமும் அணிவிக்கப்பட்டது. அதுமுதல் யாருடனும் எதுவும் பேசாமல், தன் வீட்டின் மொட்டை மாடியில் தனித்தமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்தார். அப்போது அவருக்கு வயது 20.

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள், தன் முப்பதாவது வயது வரையில், அவரது அந்த மௌனத் தவம் தொடர்ந்தது. தவத்தின் முடிவில் அந்த ஒளிக்கெல்லாம் ஒளியான பேரொளியைக் கண்டார் அம்மா. அதுமுதல் சதா ஆனந்த நிலையில் இருப்பதே அவர் வழக்கமாயிற்று. ’யான் எனதென்பது அறியேன், பகலிரவாவது அறியேன்’ என்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருந்ததுடன், பரிபூரண ஆனந்த பிரம்ம நிலையிலேயே திளைத்திருந்தார். சதா ஆனந்த நிலையில் இருப்பதால் எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருப்பது அவர் வழக்கமானது.

கோமளீசுவரன் ஆலய வாசலில் அமர்ந்திருப்பார். யாரைப் பார்த்தாலும் பெருங்குரலெடுத்துச் சிரிப்பார். அவரைக் கண்ட பலரும் ஆரம்பத்தில் பைத்தியம் என்று கருதி விலகிச் சென்றனர். பின்னரே அவர் ’ஞான சொருபிணி’ என்பதும், ’பிரம்ம யோகினி’ என்பதும் தெரிய வந்தது. அம்மாவின் ஞான நிலையை உணர்ந்த சண்முக முதலியார் என்பவர் முதல் சீடரானார். தொடர்ந்து பலரும் அம்மாவை நாடி வந்து வணங்க ஆரம்பித்தனர். அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவராக விளங்கியவர் டாக்டர் நஞ்சுண்டராவ்.

டாக்டர் நஞ்சுண்டராவ், சென்ற நூற்றாண்டின் பிரபலமான மருத்துவர்களுள் ஒருவர். கர்னல் ஆல்காட், கிருஷ்ணசுவாமி அய்யர், பி. ஆர். சுந்தரமையர், காட்டுப் புத்தூர் ஜமீன்தார் என பலருக்கும் அவர்தான் குடும்ப டாக்டர். சுவாமி விவேகானந்தரின் அன்புக்குப் பாத்திரமானவர். விவேகானந்தர், நஞ்சுண்டராவின் ஆன்மீக வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அமெரிக்காவிலிருந்தும் மற்ற வெளிநாடுகளிலிருந்து விவேகானந்தர் நஞ்சுண்டராவிற்கு எழுதிய கடிதங்கள் மிகவும் புகழ்பெற்றவை. “எனக்கு சென்னையைப் பற்றி மிகப் பெரிய நம்பிக்கை உள்ளது. சென்னையிலிருந்து ஒரு மிகப்பெரிய ஆன்மீக அலை உருவாகப் போகிறது. அது இந்தியாவெங்கும் பரவி ஒளி வீசப் போகிறது. இதில் எனக்கு பெருத்த நம்பிக்கை இருக்கிறது” என்று டாக்டர் நஞ்சுண்டராவுக்கு எழுதிய கடிதத்தில்தான் விவேகானந்தர் தெரிவித்திருந்தார்.

ஆன்மீகத்தில் அளவற்ற நாட்டம் கொண்டிருந்த நஞ்சுண்டராவின் உள்ளம் ஒரு நல்ல குருவைத் தேடிக் கொண்டிருந்தது. அந்நிலையில் தான் அவருக்கு அம்மாவின் தரிசனம் கிடைத்தது. அம்மாவை ஆரம்பத்தில் ஒரு சாதாரணப் பெண்மணியாகவே அவர் கருதினார். பின்னரே அவரது தவநிலையை உணர்ந்து கொண்டு அம்மாவின் சீடரானார். அம்மாவைத் தங்கள் குடும்பத்துள் ஒருவராகவே கருதியவர் அவருடன் காசி உட்பட பல இடங்களுக்கும் தல யாத்திரை சென்று வந்தார். பின் அம்மாவுடன் திருவண்ணாமலை சென்ற டாக்டர் நஞ்சுண்ட ராவ், அப்போது விருபாக்ஷி குகையில் தங்கியிருந்த பகவான் ரமணரையும் தரிசித்து ஆசி பெற்றார். (தேவராஜ முதலியாரின் ‘அனுதினமும் பகவானுடன்’ / 17-03-1946 நாட்குறிப்பு)

அம்மா அனுதினமும் சிவ பூஜையும் ஸ்ரீ சக்ர பூஜையும் செய்து வந்தார். அதனால் அவரது இயற்பெயரான அனந்தாம்பாள் என்பது மறைந்து ’அம்மா’ என்றும் சக்கரத்தம்மாள் என்றும் அன்புடன் அழைக்கப்படலானார். தம்மை நாடி வந்தவர்களுக்கு அன்பு, அடக்கம், கருணை, இரக்கம், பக்தி ஆகியவற்றை உபதேசித்தார். “பிரம்மம் ஒன்றே சத்தியம். அந்த பிரம்மத்தை உணர்வதே ஆனந்தம். எல்லாம் அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரபிரம்மத்தின் ஸ்வரூபமே. நமக்கு அந்நியமாய் எதுவுமே இல்லை. எல்லாம் இறைவனே! அவனே நம்மை ஆட்டுவிக்கிறான். பக்தியுடன் அவன் தாள் பணிவதே மனிதப் பிறவியின் பயன்பாடு” என்றெல்லாம் அவர் உபதேசித்ததைக் கேட்ட மக்கள் பலரும் அவரை நாடி வந்து பணிந்தனர்.

பரிபூரண ஞானநிலை அடைந்த அம்மா, அவ்வப்பொழுது நீடித்த யோக சமாதியில் ஆழ்ந்து விடுவதும் உண்டு. அன்பர்கள் காரணம் கேட்டால், தாம் திருவண்ணாமலை சென்று ரமண மகரிஷிளோடு உரையாடி விட்டு வந்ததாகவும், சேஷாத்ரி சுவாமிகளை தரிசனம் செய்து விட்டு வந்ததாகவும் கூறுவார். அதுதவிரப் பல்வேறு சித்துக்களும் அம்மா கைவரப் பெற்றிருந்தார்.

அம்மாவின் சித்தாற்றல் பற்றி தனது ’உள்ளொளி’ (மணிவாசகர் பதிப்பகம், தமிழ் மண் பதிப்பகம்) என்ற நூலில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.க.

“சென்னை கோமளீசுவரன் பேட்டையில் ஓர் அம்மையார் இருந்தார். அவர் காலஞ்சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல வானத்தில் பறப்பர். ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் மேல்மாடியில் பறந்துவந்து நின்றனர். மானுடம் பறக்கிறதெனில் உலகம் அதை எப்படி வியக்குமென்று சொல்ல வேண்டுவதில்லை. அக்காலத்தில் சென்னையில் வதிந்த விஞ்ஞானியர் பலர் சூழ்ந்து சூழ்ந்து அம்மையார் நிலையை ஆராய்வர். அப்பொழுது சென்னை மியூஸியத் தலைவராயிருந்த ஓர் ஐரோப்பியரால் பறவையார் நிலை பெரிதும் ஆராயப்பட்டது. அம்மையார் பறவை இனத்தைச் சேர்ந்தவரென்றும், அவரிடம் பறவைக்குரிய கருவி கரண அமைப்புகள் சில உள்ளன என்றும், கூர்தல் (Evolution) அறப்படி அத்தகையப் பிறவி இயற்கையில் அமைதல் கூடும் என்றும் அவரால் விளக்கப்பட்டன. அவர் விளக்கம் மற்றவரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. யான் ‘தேசபக்தன்’ ஆசிரியனாகியபோது டாக்டர் நஞ்சுண்டராவிடம் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. பறவையாரைப் பற்றி அவரை நான் விசாரித்தேன். அவர், ‘அம்மையார் சித்தரினத்தில் சேர்ந்தவர்’ என்று கூறினர். பறவை நாயகியார் நிலை மனோதத்துவத்துக்கு எட்டுவதா? உன்னிப் பாருங்கள்”.

பரிபக்குவம் பெற்ற ஞானிகள், சித்தர்கள் இருந்த இடத்திலிருந்தே அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியும். அந்த வகையில் தான் பெற்ற ‘இலகிமா’ என்ற சித்தின் மூலம், தனது உடல் எடையைக் காற்றை விட எடைகுறைந்ததாய் மாற்றிக் கொண்டு, வானத்தில் பறந்திருக்கிறார் அம்மா என்றே நாம் அனுமானிக்க முடிகிறது.

ஞானிகளாகவும், மகான்களாகவும் இருப்பவர்கள் காலம், இடம், தூரம் போன்ற எல்லா எல்லைகளையும், நான், எனது போன்ற குறுகிய நோக்கங்களையும் கடந்தவர்கள். எல்லாம் பிரம்மத்தின் சொரூபமே; எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்பதை அனுபவத்தில் உணர்ந்தவர்கள் அவர்கள். ஆனால் அப்படிப்பட்ட மகான்களின் ஆற்றல்களையும், அருள் உபதேசங்களையும் புரிந்து கொள்ள இயலாதவர்கள் அவற்றைப் பொய் என்றும், மூட நம்பிக்கை என்றும் புறந்தள்ளி விடுகின்றனர். பகுத்தறிவால் நம்ப முடியாத எதுவும், விஞ்ஞான அளவுகோலுக்கு மாறான எதுவும் கற்பனையானதாகவும், நம்ப முடியாத ஒன்றாகவும் கருதப்படுகிறது. ஆனால் தனது அறிவிற்கு அப்பாற்பட்ட எதுவுமே இருக்க முடியாது என்று எண்ணுவதே உண்மையில் அறியாமையும் மூடநம்பிக்கையுமாகும். ’தான், தனது’ என்ற அகந்தை இருக்கும்வரை மெய்ஞ்ஞானம் சித்திக்காது. உண்மையை அறிந்து கொள்ளவும் இயலாது.

இவ்வாறு பல்வேறு ஆற்றல்கள் பெற்றிருந்த அம்மா, 1901ம் ஆண்டு, பிப்ரவரி 28ம் நாள், இறை ஜோதியில் ஐக்கியமானார். சீடர் நஞ்சுண்டராவால் சென்னை திருவான்மியூரில், கலாக்ஷேத்ரா அருகே அம்மாவுக்கு ஓர் அழகிய சமாதி ஆலயம் எழுப்பப்பட்டது.

ஒருமுறை தம்மைச் சந்தித்த நஞ்சுண்டராவிடம் காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள், அம்மாவின் சமாதி ஆலயம் ஒரு மகத்தான் சக்தி பீடம் என்றும், தவறாமல் பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அதன்படி டாக்டர் நஞ்சுண்டராவ் அமைத்த டிரஸ்டின் மூலம் சிறப்பான முறையில் இங்கு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. மாசி மாதத் திருவாதிரை தினத்தன்று அம்மாவின் குருபூஜை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பெண்கள் மெய்ஞ்ஞானம் பெறத் தகுதியானவர்களே என்று வாழ்ந்து காட்டிய மகா தபஸ்வினி ஸ்ரீ சக்கரத்தம்மாளின் ஞான வாழ்க்கை புனிதமானது. என்றும் நினைந்து போற்றத்தக்கது.

வானில் பறந்த பெண் சித்தர்




“என்னடா இது! மனிதனாவது பறப்பதாவது! எல்லாம் சுத்த ஏமாற்றுவேலை!” என்கிறீர்களா…, பொறுங்கள், அவசரப்படாதீர்கள். கீழ்கண்ட பத்தியை முதலில் படியுங்கள்…

“சென்னைக் கோமளீசுவரன் பேட்டையில் ஓர் அம்மையார் இருந்தார். அவர் காலஞ்சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல வானத்தில் பறப்பர். ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் மேல்மாடியில் பறந்துவந்து நின்றனர். மானுடம் பறக்கிறதெனில் உலகம் அதை எப்படி வியக்குமென்று சொல்ல வேண்டுவதில்லை. அக்காலத்தில் சென்னையில் வதிந்த விஞ்ஞானியர் பலர் சூழ்ந்து சூழ்ந்து அம்மையார் நிலையை ஆராய்வர். அப்பொழுது சென்னை மியூஸியத் தலைவராயிருந்த ஓர் ஐரோப்பியரால் பறவையார் நிலை பெரிதும் ஆராயப்பட்டது. அம்மையார் பறவை இனத்தைச் சேர்ந்தவரென்றும், அவரிடம் பறவைக்குரிய கருவி கரண அமைப்புகள் சில உள்ளன என்றும், கூர்தல் (Evolution) அறப்படி அத்தகையப் பிறவி இயற்கையில் அமைதல் கூடும் என்றும் அவரால் விளக்கப்பட்டன. அவர் விளக்கம் மற்றவரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. யான் ‘தேசபக்தன்’ ஆசிரியனாகியபோது டாக்டர் நஞ்சுண்டராவிடம் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. பறவையாரைப் பற்றி அவரை நான் விசாரித்தேன். அவர், ‘அம்மையார் சித்தரினத்தில் சேர்ந்தவர்’ என்று கூறினர். பறவை நாயகியார் நிலை மனோதத்துவத்துக்கு எட்டுவதா? உன்னிப் பாருங்கள்.”

இதைச் சொன்னது யார் தெரியுமா?

பொய்யாமையை தனது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்த, சிறந்த பத்திரிகை ஆசிரியராகவும், எழுத்தாளாரகவும் திகழ்ந்த, தொழிலாளர் நலனுக்காக உழைத்த, முதன் முதலில் தொழிலாளர்களுக்காக என்று சங்கம் கண்ட, இலக்கியவாதி, ஆன்மிகவாதி என்று பன்முகங்கள் கொண்ட, ஈவெ.ராவின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்த….

”தமிழ்த் தென்றல்” திரு.வி.க. அவர்கள்தான்.

அவர் அம்மையார் பறப்பதைக் கண்ணால் கண்டு, உறுதிப்படுத்தி தனது ‘உள்ளொளி’ என்ற நூலில் இது பற்றி விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். (பக்கம் 57, மணிவாசகர் பதிப்பகம். தமிழ் மண் பதிப்பகமும் அவரது நூல் தொகுப்பை வெளியிட்டுள்ளது)

அம்மாவின் வரலாற்றை பின்னர் ஒரு சமயம் விரிவாக எழுதுகிறேன். ஸ்ரீ சர்க்கரை அம்மாவின் ஆலயம் திருவான்மியூரில், கலாஷேத்ரா சாலையில், பாம்பன் சுவாமிகள் சமாதி ஆலயத்திற்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது.

அதனை நிர்மாணித்தவர் சுவாமி விவேகானந்தரின் அன்புக்குப் பாத்திரமான, பாரதியாரின் நண்பரான டாக்டர் சி. நஞ்சுண்ட ராவ். இவர் அம்மாவின் முதன்மைச் சீடர். அக்காலத்தில் மிகப் பிரபலமான மருத்துவர்.

வடுக பைரவர்: பிரான்மலை


ஆகாயம், பூமி, பாதளம் என மூன்று நிலைகளில் காணப்படும் ஒரே ஆலயம் பிரான்மலை கொடுங்குன்ற நாதர் ஆலயம் தான். வள்ளல் பாரி ஆண்ட பறம்பு மலையே தற்போது பிரான் மலை என போற்றப்படுகின்றது.

இங்கு மங்கைபாகர் சன்னதி ஆகாய நிலையில் விளங்குகின்றது. இது மேல் பகுதியில் விளங்குகின்றது.

வடுகபைரவர், விநாயகர் மற்றும் தஷிணாமூர்த்தி சன்னதி பூமி என்ற நிலையில் காணப்படுகின்றது. அதாவது ஆகாயநிலைக்குக் கீழே, பாதாள நிலைக்கு மேலே நடுத்தரமாகக் காணப்படுகின்றது.

அதன் கீழே கொடுங்குன்ற நாதர் சன்னதி காணப்படுகின்றது. இது பாதாள நிலை எனக் கூறலாம்.



இந்த நடுத்தரமான பூமி நிலையில், சூலம், உடுக்கை, கபாலம், நாகபாசம் போன்றவற்றைக் கொண்டவராக விளங்குகின்றார் இந்த வடுக பைரவர்.

வடுகன் என்றால் பிரம்மச்சாரி என்ற பொருள் உண்டு. வீரன் என்ற பொருளும் கூறப்படுகின்றது. அதற்கேற்றால் போல் சற்று உக்ரமான தோற்றத்துடன் காணப்படும் இவருக்கு, வீரத்தின் அடையாளமான வாள் சார்த்தி வைக்கப்படுள்ளது. நின்ற திருக்கோலம். அரசர்களால் வழிபாடு செய்யப்பட்டதால் வீரத்தின் அடையாளமான வாள் சார்த்தி வைக்கப்படுள்ளதாகக் கூறப்படுகின்றது.

மற்றொரு கதையும் உண்டு. முண்டாசுரன் என்னும் அரக்கன், சிவனைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவில்லை என்ற வரம் பெற்றதால், ஆணவத்துடன் அனைவரையும் கொடுமைப் படுத்தினானாம். பிரம்மனையே அவன் போருக்கு அழைக்க, அவன் செருக்கை அழித்து அவனை அழிக்க, சிவன் ஏற்ற திருக்கோலமே ஸ்ரீ வடுகபைரவராம்.



ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றையும், காரியத்தடைகளையும் உடனடியாகக் களைபவர் இந்த வடுக பைரவர். இவருக்குக் கருப்பு வஸ்திரம் சார்த்தி, எலுமிச்சை மாலை அணிவித்து வேண்டிக் கொண்டால் உடனடியாகப் பலன் கிடைக்கும்.

அமைவிடம்:

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான இது புதுக்கோட்டை – சிவகங்கை மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளது. மேலைச்சிவபுரி என்ற ஊருக்கு அருகில் இத்தலம் உள்ளது. சிங்கம்புணரி என்ற ஊரிலிருந்தும், பொன்னமராவதியிலிருந்தும் பேருந்துகள் உள்ளன.

மலைக்கு மேலே, சிறு ஆலயமும், இஸ்லாமியப் பெரியவரின் தர்காவும் உள்ளது. ஏறுவதற்கு மிகவும் அரியமலை. முல்லைக்குத் தேர் ஈந்த வள்ளல் வாழ்ந்ததால் இந்த ஊர் என்றும் எப்பொழுதும் பசுமையாகவும், வளமாகவும் காணப்படுகின்றது.

Thursday, March 3, 2011

பிதுர் தோஷமும் பரிகாரங்களும்:







உங்கள் மனைவிக்கு கைப்பிடி சோறும்,கட்டுவதற்கு புடவையும் நீ கொடுத்து அவளை காப்பாற்றினால் நீ கால் ஞானி!

பெற்ற பிள்ளைக்கு பிடி சோறும் கற்பதற்குக் கல்வியும் நீ கொடுத்தால் நீ அரை ஞானி!

மூதாதையர்களையும் மூத்தவர்களையும் மதித்து ஆதரித்து நடந்தால் நீ முக்கால் ஞானி!!

இந்த மூன்றையும் நீ கடைசிவரை செய்து வந்தால் நீ முழு ஞானி!!!

நிர்மலான மனதுடன் நிச்சயம் செய்து வந்தால் உன் மனம் நிர்மலாகும்.



உங்களது பிறந்த ஜாதகத்தில் ராகு,கேதுக்கள் உங்கள் வாழ்வில் பிதுர்தோஷத்தை உண்டாக்குகின்றன.உங்களது பிறந்த ஜாதகத்தில் 1,5,7,9-இவ்விடங்களில் ராகு அல்லது கேது நின்றால் உங்கள் வாழ்க்கை தினமும் போராட்டம் தான்!இதுவே பித்ரு தோஷம் ஆகும்.பித்ரு தோஷம் உள்ளவர்கள் என்ன பரிகாரம் செய்தாலும் பலன் கிடைக்காது.

பித்ரு தோஷம் பரிகாரம் செய்தபின்னர்தான் வாழ்க்கை போராட்டம் இன்றி செல்லத்துவங்கும்.பிதுர் தோஷம் தன்னையும், தன்னைச் சேர்ந்த குடும்பத்தையும், குழந்தைகளையும் பாதிக்கும்.நோய்கள், தேவையற்ற வம்புகள், கணவன் மனைவி பிரச்னைகளை உருவாக்கும்.குறைந்தது மூன்று தலைமுறைகள் பாதிப்படையும்.

மகாளய பட்சம் என்று ஒரு காலம் தமிழ்வருடத்தில் ஆண்டுக்கு ஒருமுறை வரும்.புரட்டாசி மாதத்தில் வரும் அமாவசையிலிருந்து முன்னதாக பிரதமை ஆரம்பித்து வரும் பதினைந்து நாட்களாகும்.இந்த 15 நாட்களில் பித்ருக்கள் பூமிக்கு வந்து தனது சந்ததியினருக்கு ஆசி வழங்குவார்கள்.அந்த 15 நாட்களில் நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால் அந்த தர்ப்பணம் நேரடியாக நமது பித்ருக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள்.பட்சம் முழுவதும் செய்ய முடியாதவர்கள் மகாபரணியிலும் அமாவசையன்றும் செய்தால் கூட போதும்.ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களிலும் பிதுர்களுக்கு செய்யும் தர்ப்பணம் மற்றும் தானங்கள் நமது அனைத்து தோஷங்களையும் நீக்கும்.

மிகக்கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள் இராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வது அவசியம்.இந்த திலா ஹோமம் வேதம் அறிந்த பண்டிதர்களால்தான் செய்ய வேண்டும்.

திலா ஹோமம் எனப்படுவது நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும்.திலம் என்றால் எள் என்று அர்த்தம்.திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு இராமேஸ்வரத்தில் தங்க வேண்டும்.நேராக வீட்டுக்கு எடுத்துச் செல்வது தவறு.சிரத்தையுடன் செய்தால் தான் முழுப்பலனும் கிடைக்கும்.

திலா ஹோமம் முடிந்து பிண்டங்களை கடல் நீரில் கரைக்கும் போது கருடபகவான் அங்கு வட்டமிட வேண்டும்.இந்த சம்பவம் நிகழ்ந்தால்தான் மகாவிஷ்ணு நம்மை ஆசிர்வதிப்பதாக அர்த்தம்.

வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணிக்கரையில் திலாஹோமம் செய்து பித்ருக்களின் ஆசிர்வாதம் பெறலாம்.

கேரளாவில் திருவனந்தபுரம் அருகில் உள்ள சுராம க்க்க்ஷேத்த்ரம் என்ற ஸ்தலம் உள்ளது.அங்கும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.

பிதுர்சாந்தி செய்யாமல் செய்கின்ற எந்த பூஜைகளும் பலன் கொடுப்பதில்லை.கேரளாவில் பிதுர்சாந்திக்கு ஜென்ம நட்சத்திரத்தன்று பசுவுக்கு பருத்திக்கொட்டை பால் எடுத்து வெல்லம் கலந்து பித்ருக்களை வேண்டி உண்பதற்குக் கொடுக்கின்றனர்.

வாழ்வில் ஒவ்வொருவரும் ஒருதடவையாவது காசி, கயா,இராமேஸ்வரம் சென்று பிதுர் ஹோமம் செய்ய வேண்டும்.

சில வயதானவர்கள் நோய்நொடி இல்லாமல் படுக்கையில் உயிர் விடுவது எப்படி?






ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலும் 8 வாழைப்பழங்கள் ஒரு எருமை மாட்டிற்கு கொடுத்துக்கொண்டே வர வேண்டும்.

எமனது காயத்ரியை தினமும் அந்த(படுத்த படுக்கையாக இருக்கும்) பெரியவர் அறையில் 27 முறை ஜபித்துவரவேண்டும்.காலையில் அல்லது மாலையில்!

முதியவர்கள் நல்ல முறையில் உயிர் துறந்தனர்.ஜோதிடர்கள் இதை பரிகாரமாக சொல்லலாம்.

எமன் காயத்ரி மந்திரம்:

ஓம் கால ரூபாய வித்மஹே

தண்டதராய தீமஹி

தன்னோஹ் எமஹ ப்ரசோதயாத்



அல்லது



ஓம் வைவஸ்வதாய வித்மஹே

தண்டஹ்ஸ்தாய தீமஹி

தன்னோஹ் எமஹ ப்ரசோதயாத்.



இந்த பரிகாரத்தை நமக்கு அறிமுகப்படுத்தியவர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்.

விமானத்தைக் கண்டுபிடித்த இந்து தால் படயே:



விமானத்தைக் கண்டுபிடித்த இந்து;திரு.தால் படயே,புனே,இந்துயா.


அமெரிக்காவின் ரைட் சகோதரர்கள் அல்ல.



உலகிலேயே விமானத்தைக் கண்டுபிடித்தது 1903 டிசம்பர் 17ல் அமெரிக்காவில் உள்ள ரைட் சகோதரர்கள் என்று உலக வரலாறு சொல்கிறது.ஆனால்,அது தவறு.

1895 ஆம் வருடத்தில் புனே அருகில் தால் படயே என்பவர் கண்டுபிடித்த விமானம் 10,000 அடிகள் உயரத்தில் பறந்தது.சுமார் 2 கி.மீ.தூரம் வரை பறந்தது.(ஆனால் ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானம் தரையிலிருந்து சில அடிகள் உயரத்தில்-14அடிதூரம் வரைதான் பறந்தது)



அடிமை இந்தியா என்பதால்,அன்றைய தினசரிபத்திரிகைகளில் கூட வராமல் பிரிட்டிஷ் அரசு பார்த்துக் கொண்டது.அதன் பிறகு,தால் படயே பிரிட்டிஷ் அரசால் அவரது கண்டுபிடிப்புடன் வெளிநாட்டிற்குக் கடத்தப்பட்டார்.அவரது நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை?ஆதாரம்:vedic world heritage,volume VII



அதே சமயம்,போஜராஜா என்ற மகாராஜா சுமார் 20,000ஆண்டுக்கு முன்பு ‘வைமானிகா சாஸ்திரம்’ என்ற நூலை இயற்றியுள்ளார்.இதில்,தரையில் செல்லும் 339 விதமான வாகனங்களை கட்டமைப்பது பற்றியும்,நீரில் செல்லும் 445விதமான வாகனங்களைக் கட்டமைப்பது பற்றியும்,விண்ணில் பறக்கும் 223 விதமான வாகனங்களை கட்டமைப்பது-உருவாக்குவது பற்றியும் பாடல்களாக எழுதப்பட்டுள்ளன.



இன்றும் வைமானிகா சாஸ்திரம் இந்தியா முழுக்கக் கிடைக்கிறது.அவை சமஸ்கிருதப் பாடல்களின் தொகுப்புகளாக கிடைக்கின்றன.யார் எம்.டெக்கில் ஏரோநாட்டிக் என்சியரிங்கும்,சமஸ்கிருதத்தில் எம்.ஏ.,வும் முடிக்கிறார்களோ,அவர் வைமானிகா சாஸ்திரத்தைக் கொண்டு பல புதிய ராக்கெட்டுகள்,விமான தொழில்நுட்பங்கள் கண்டறிந்து கோடீஸ்வரர் ஆவது நிச்சயம்.

வைமானிகா சாஸ்திரத்தில் உள்ள விமானத் தொழில்நுட்பத்திங்களில் ஒரே ஒரு விமானத்தொழில்நுட்பம் மட்டுமே இன்று புழக்கத்தில் உள்ளது.அதுவும் அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது.அது ரேடாரில் சிக்காத விமானம்!!!