You become the light of your path.....

If you had but the faith of a mustard seed,you could say to this mountain'"Be thou moved'" and so it would be..{Jesus Christ}

Friday, August 13, 2010

கலவியில் பிறந்து, கேள்விகளில் வாழுகின்றோம்.....!!!!

உடல் எடுத்தக் காரணமும் தெரியாது - இதற்குள்
உயிர் வந்த சூட்சமமும் தெரியாது -_ இறுதியில்
ஊரெல்லாம் கூடி அழும் வேதனையும் புரியாது....
ஏனிந்தப் பிறவி?? ஏனிந்தப் பிறவி??


புதிதல்ல இந்த பூமி , புதியவர்களும் நாமல்ல இங்கு- இருந்தும்
புதிரோடு புலம்புகின்றோம்..புரியாமல் வாழுகின்றோம்,

வாழ வந்த வையகத்தில் வழி தெரியாத ஒரு பயணம்,
இருக்கும் உலகமோ ஒன்று, காணும் பாதைகளோ கோடி - இதில்
என் பாதங்களின் சொந்தப் பாதை எந்தப்பாதை???

No comments:

Post a Comment